
அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான
காரியமில்லை . பலர்
சேர்ந்து உழைத்து உருவாக்கிட
வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய
கிணற்றில் தண்ணீர் வராமல்
போய்விட்டால்
அத்தனை உழைப்பும்
வீணாகி விடும் . அதே போல்
கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும்
உள்ளது . ஆனால்
இவற்றிற்கெல்லாம் எளிய
இலகுவான தீர்வுகள் இதோ.
மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென
புற்கள் வளர்ந்திருந்தால், அந்த
இடத்தில் கிணறு தோண்ட
குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும்
என்கின்றனர் .
சரி நீரூற்று இருக்கும் ஆனால்
நல்ல நீரூற்று என
அறிவது எப்படி ?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும்.
அடுத்த நாள் கவனித்தால்
எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டு சென்று சேர்த்த
அடையாளங்கள் ,
அதாவது தடயங்கள் இருக்குமாம்
அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .
சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . .
கோடைகாலத்திலும் வற்றாத
நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?
கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால்
சுரக்கும் பசுக்களை அந்த
நிலத்திட்க்குள் மேய விட
வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த
பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு ,
ஐந்து நாட்கள் கவனித்தால்
அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம் . அந்த
இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்.
posted from Bloggeroid
No comments:
Post a Comment