மாம்பழம்:
முக்கனிகளில்
முதன்மையானது. இதில்
உயிர்சத்து 'A' உள்ளதால் நல்ல
கண் ஒளி தருகிறது. இரத்த
அழுத்த நோய் உள்ளவர்கள்
சாப்பிடுவதினால் ரத்த
அழுத்தம் சீராகும்.
குழந்தைகளும்
சாப்பிடலாம்.
2. வாழைப்பழம்:
தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம்
சாப்பிட்டு வந்தால்
தொற்று நோய்
நம்மை அணுகாது.
3. முகம் வழுவழுப்பாக
இருக்க:
கசகசாவை எருமை தயிரில்
அரைத்து தினந்தோறும்
இரவு படுக்க போகுமுன்
தடவி வந்தால் முகம்
பளபளப்புடன் சுருக்கங்கள்
நீங்கி பொலிவு தரும்.
4. இரத்த சோகையை போக்க:
பீர்க்கன்காய் வேர் கசாயம்
சாப்பிட்டு வர இரத்த
சோகை நீங்கும்.
5. கர்ப்பிணிகள் சாப்பிட
சிறந்தது:
தினசரி ஒரு மாம்பழம்
சாப்பிட பிறக்கும்
குழந்தை ஊட்டத்துடன்
இருக்கும். உடல் பலவீனம்,
கை, கால் நடுக்கம், மயக்கம்
முதலிய தொல்லைகள்
வராது.
6. குழந்தைகளுக்கு:
குழந்தைகளுக்கு கொய்யாப்பழம்
சாப்பிட கொடுங்கள்.
கொய்யாப்பழம்
சாப்பிடுவதால் உடல்
வளர்ச்சியும் எலும்புகள்
பலமும் பெறுகின்றன.
வயிற்றில் புண் இருந்தால்
குணப்படுத்தும் ஆற்றல்
உடையது.
7. உடல் சக்தி பெற:
இரவு உணவாக வாழைப்பழம்
2, தேங்காய்
1முடி சாப்பிட்டு வர உடல்
சக்தி பெறும்.
8. வெட்டுக்காயம் குணமாக:
நாயுருவி இலையுடன்
மஞ்சள் சேர்த்து அரைத்து,
வெட்டுக் காயத்தின்
மீது பூசிவர விரைவில்
ஆறிவிடும்.
9. சுகப்பிரவசமாக:
ஆப்பிள் பழம், தேன்,
ரோஜா இதழ், குங்குமப்பூ,
ஏலக்காய்
ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள்
தொடர்ந்து சாப்பிட்டு வர
ஆரோக்கியமான பிரசவம்
ஏற்படும்.
10. உடல் அரிப்பு குணம் பெற:
வன்னி மரத்தின்
இலையை பசும்பால்
விட்டு அரைத்து, தினசரி 1
அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால்
உடல் அரிப்பு நீங்கும்.
11. காதில் சீழ்வடிதல்
குணமாக:
வெற்றிலையை நறுக்கி தேங்காய்
எண்ணெய் இல்
போட்டு காய்ச்சி,
சிவந்தவுடன்
இறக்கி ஆறவைத்து சிசாவில்
பத்திரப்படுத்தவும். காலை,
மாலை இரண்டு சொட்டு காதில்
விட்டு வர காதில் சீழ்வடிதல்
நின்று விடும்.
12. நெஞ்சுவலி குணமாக:
அத்திப்பழம்
தொடர்ந்து சாப்பிட்டு வர
நெஞ்சுவலி வராது.
அத்திப்பழம்
இருதயத்தை பலப்படுத்துகிறத
ு.
13. சிலந்தி கடிக்கு மருந்து:
தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும்
சிறந்த மருந்து.
தும்பை இலை சாறு சாப்பிடவும்.
14. சீதபேதி குணமாக:
புளியங்கொட்டை தோல்,
மாதுளம் பழத்தோல் சம
அளவு இடித்து தூள்
செய்து பசும்பாலில்
சாப்பிடி சீதபேதி குணமாகும்.
15. வயிற்று நோய்
குணமாக:
சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில்
சாப்பிடி வயிற்று நோய்
குணமாகும்.
16. காது வலி குணமாக:
வெற்றிலை சாறை காதில்
விட்டால்
காதுவலி குணமாகும்.
17. நுரையீரல் குணமாக:
நாயுறுவி செடியின்
விதைகளை காயவைத்து இடித்து தூள்
செய்து சலித்து போத்தலில்
வைத்து தினசரி காலை,
மாலை இரு வேளை 10
மில்லி பாலில்
சாப்பிட்டு வர நுரையீரல்
நோய் குணமாகும்.
18. பேதி குணமாக:
மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில்
கலந்து கொடுத்தால்
தண்ணீராக போகும்
பேதி நிற்கும்.
19. வாதநோய் குணமாக:
குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1
அவுன்ஸ் சாப்பிட்டு வர
வாதநோய் குணமாகும்.
20. மலச்சிக்கல் சரியாக:
அகத்தி கீரையை நிழலில்
உலர்த்தி பொடி செய்து காலை,
மாலை 1 கரண்டி பாலில்
கலந்து சாப்பிட்டு வந்தால்
மலச்சிக்கல் குணமாகும்.
21. மேகரோகம் குணமாக:
ஆலம்பட்டையை பட்டு போல்
பொடி செய்து வெந்நீரில்
கொதிக்க
வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர
மேகரோகம் குணமாகும்.
22. நீரழிவு நோய் குணமாக:
மாமரத்தின் தளிர்
இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக்
கொள்ளவும். 1
கரண்டி வெந்நீரில் கொதிக்க
வைத்து தினமும்
காலை வெறும் வயிற்றில்
சாப்பிட்டு வர நீரழிவு நோய்
குணமாகும்.
23. இரத்த
பேதியை குணப்படுத்த:
அத்திப்பட்டை, நாவல்பட்டை,
கருவேலம் பட்டை,
நறுவிளம்
பட்டை ஆகியவற்றை சமஅளவு பொடிசெய்து 50
கிராம் தண்ணீரில் கொதிக்க
வைத்து வடிகட்டி நாள்தோறும்
3 வேளை குடித்து வர இரத்த
பேதி, சீத
பேதி குணமாகும்.
24. மூட்டுவலி குணமாக:
அத்திப்பாலை பற்று போட்டு வர
மூட்டு வலி குணமாகும்.
25. நரம்பு தளர்ச்சி நீங்க:
தினசரி 1 மாம்பழம்
சாப்பிட்டு வர
நரம்பு தளர்ச்சி குணமாகும்.
26. பற்கள் உறுதியாக இருக்க:
மாவிலையை பொடி செய்து பல்
துளக்கினால் பற்கள்
சுத்தமாகவும்
உறுதியாகவும் இருக்கும்.
27. சேற்றுபுண் குணமாக:
காய்ச்சிய வேப்பெண்ணெய்
தடவி வர சேற்று புண்
குணமாகும்.
28. மூலம் இரத்தம்
வெளியேறுவதை நிறுத்த:
வெங்காய சாறு 50 மில்லி,
பசும்பால் 400 மில்லி,
அதி மதுரம் 20 கிராம்
சேர்த்து காய்ச்சி பதமாகும்
வரை கொதிக்க
காய்ச்சி பத்திரப்படுத்தவும்.
இதனை நாள்தோறும் 1
கரண்டி வீதம் ஆறு நாட்கள்
தொடர்ந்து சாப்பிட
வேண்டும்.
29. வயிற்றுவலி குணமாக:
குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர
வயிற்று வலி,
வயிற்று புண் குணமாகும்.
கீரையை நிழலில்
உலர்த்தி பவுடராகவும்
சாப்பிடலாம்.
30. வயிற்று பூச்சிகள்
ஒழிய:
வேப்பிலையை நன்றாக
அரைத்து சாறு எடுத்து அத்துடன்
1 கரண்டி தேன்
சேர்த்து கலக்கி காலை,
மாலை இரண்டு வேளை சாப்பிட
வயிற்று பூச்சிகள்
தொந்தரவு இராது.
31. மலச்சிக்கல் தீர:
பேயன் வாழைப்பழம்
தோலுடன் பில்லையாக
நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்ணெய்யில்
ஊற வைக்கவும்
போத்தலை அன்றாடம்
வெயிலில் வைக்கவும். 3
நாட்கள் ஊறிய பின் தினசரி 1
வில்லை எண்ணெய்யுடன்
உட்கொள்ளவும். மலச்சிக்கல்
தீரும்
32. குழந்தைகளுக்கு கண்
சூடுதனிய:
நெல்லிக்காய்
சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள்
கொடுத்து வர
கண்சூடு குணமாகும்.
33. இரத்தத்தை சுத்தப்படுத்த:
இஞ்சி சாறுடன் தேன்
கலந்து சாப்பிட இரத்தம்
சுத்தமாகும்.
34. கக்குவான் இருமல்
குணமாக:
நாயுறுவி கதிர், 1
சீயக்காய், 1 மஞ்சள்
துண்டு சேர்த்து அரைத்து 1
டம்ளர் தண்ணீர்
விட்டு காய்ச்சி கொதித்தவுடன்
இறக்கி வைத்து கொள்ளவும்.
காலை, மாலை 1/2 டம்ளர்
கொடுக்க குணமாகும்.
35. இரத்தம் உறைதல்
குணமாக:
நெல்லிக்காய்
தொடர்ந்து சாப்பிட்டு வர
இரத்தம்
உறைவதை தடுக்கலாம்.
36.
சொறி சிரங்கு குணமாக:
கீழாநெல்லி இலையுடன்
சிறிது உப்பு சேர்த்து அரைத்து பூசி 1
மணி நேரம் கழித்து குளிக்க
சொறி சிரங்கு குணமாகும்.
37. சளி மூக்கடைப்பு தீர:
கடுக்காய் பவுடர்,
நெல்லிக்காய்
பொடி சேர்த்து தேனில்
சாப்பிட
சளி மூக்கடைப்பு குணமாகும்.
38. தலைவலி குணமாக:
குப்பைமேனி சாறு தடவ
தலைவலி குணமாகும்.
39. இரத்த
கொதிப்பு குணமாக:
அகத்தி கீரையை வாரம் 2
முறை சாப்பிட்டு வர இரத்த
கொதிப்பு ஏற்படாது.
40. கண்வலி வராமல் தடுக்க:
எள் செடியின்
பூவை பறித்து பற்களில்
படாமல் விழுங்கி விட
வேண்டும். எத்தனை பூக்கள்
விழுங்குகின்றமோ
அத்தனை வருடம்
கண்வலி வராது.
41. தொண்டை கரகரப்பு நீங்க:
பூவரசன் வேர்,
பட்டை கஷாயம்
செய்து கொப்பளித்து வர
தொண்டை தொடர்பான
பிணி அகலும்.
42. குடல்புண் குணமாக:
மணத்தக்காளி கீரை சாப்பிட்டால்
குடல் புண் குணமாகும்.
தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.
43. கால்பித்த வெடிப்பு:
அரசமரத்து பாலை பித்தவெடிப்பு மீது தடவிவர
குணமாகும்.
44. இரத்தம் சுத்தமாக:
தினசரி இலந்தை பழம்
சாப்பிடுங்கள். இலந்தை பழம்
இரத்தத்தை சுத்திகரித்து சக்தி அதிகரிக்கும்.
சுறுசுறுப்பு உண்டாகும்.
பசியை தூண்டும்
45. முடிவளர்வதற்கு:
கறிவேப்பிலை அரைத்து தேங்காய்
எண்ணெய்யில்
கலந்து காய்ச்சி தலையில்
தேய்த்து வரவும்.
தலைமுடி அடர்த்தியாகவும்
கருப்பாகவும்
வளர்ந்து வரும்.
46.
செருப்புக்கடி குணமாக:
தென்னை ஓலையை தனலில்
போட்டு கருக்கி பட்டு போல
தூள் செய்து தேங்காய்
எண்ணெய்யில
குழப்பி பூசி வந்தால்
மூன்றே நாளில்
குணமாகும்.
47. கருப்பு முடியாக
மாற்ற:
காய்ந்த
நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய்
எண்ணெய்யுடன்
கலந்து கொதிக்க
வைத்து வடிகட்டி தேய்த்து வர
முடி கருமையாகும்.
முடி உதிர்வதை தடுக்கும்.
48. தொழுநோய் குணமாக:
கடுக்காய் வேர்,
பட்டை இலை,
பூ உலர்த்தி இடித்து சலித்து காலை,
மாலை 1/2
கரண்டி பசும்பாலில்
கலந்து உண்டு வர
தொழுநோய் குணமாகும்.
49. பல் சம்பந்தப்பட்ட நோய்கள்
குணமாக:
ஆலமரத்து பட்டையை பட்டு போல்
பொடி செய்து வைத்து கொள்ளவும்.
வெந்நீரில் கொதிக்க
வைத்து சர்க்கரை சேர்த்து 3
மாதம் சாப்பிட்டு வர பல்
நோய் நீங்கும். பல் ஆட்டம்,
ஈறுகளின் தேய்மானம் தீரும்.
பல் கூச்சம், வாய் நாற்றம்
விலகும்.
50.
சதை போடுவது குறைக்க:
வாழை தண்டு சாறு,
பூசணி சாறு, அருகம்புல்
சாறு ஆகிய மூன்றில்
ஏதாவது ஒன்றை குடித்து வர
உடல் பெருக்கம் குறையும்.
உடல் அழகு பெறும்.
51. தூக்கம் வர:
வெங்காயத்தை நசுக்கி அதன்
விந்தை 1 சொட்டு கண்ணில்
விட்டால் போதும். தூக்கம்
வரும்.
52. உடலில் உள்ள கெட்ட
நீரை வெளியேற்ற:
உடலில் கெட்ட நீர் உள்ளவர்கள்
தினசரி பப்பாளிக்
காயை சாப்பிட்டு வர துர்நீர்
சிறுநீரின் வழியாகவும்
வியர்வையின் வழியாகவும்
வெளியேறும்.
53. கண்கள் குளிர்ச்சி:
கடுக்காய் தோல்,
நெல்லிக்காய் இரண்டையும்
கொட்டை நீக்கி காயவைத்து பவுடராக்கி பாட்டிலில்
வைத்து கொள்ளவும்.
தினசரி 3 கிராம்
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
கண்பார்வை சக்தி அதிகரிக்கும்.
கண் குளிர்ச்சி பெறும்.
சளியினால் ஏற்படும்
தலைவலி குணமாகும்.
54. வாந்தியை நிறுத்த:
துளசி சாறு,
கல்கண்டு சேர்த்து சாப்பிட
வாந்தி நிற்கும்.
55. பித்த வாந்தியை நிறுத்த
: வேப்பம்
பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன்
கலந்து சாப்பிட
வாந்தி நிற்கும்.
56. வயிற்று கடுப்பு நீங்க:
அரச
இலை கொழுந்தை மோருடன்
அரைத்து மோருடன்
கலந்து குடிப்பதன் மூலம்
வயிற்றுக்
கடுப்பு குணமாகும்.
57. மந்தம் அஜீரணம் குணமாக:
கருவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து மிளகு,
சுக்கு, சீரகம்,
உப்பு பொடியாக்கி கலந்து வைத்துக்
கொள்ளவும். சோற்றுடன் 1
கரண்டி பவுடர்
சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால்
மந்தம் நீங்கும்,
மலக்கட்டு நீங்கும்.
58. சிறு நீர் எரிச்சல்
குணமாக:
அன்னாசி பழச்சாறு சாப்பிட
சிறுநீர் எரிச்சல்
குணமாகும்.
59. வாய் நாற்றம் போக:
நெல்லி, முள்ளி.
தான்றிக்காய், கடுக்காய்
மூன்றையும் குடி நீரில்
ஊறவைத்து காலையில் இந்த
தண்ணீரில் வாய்
கொப்பளிக்கவும். இதனால்
வாய் நாற்றம் தீரும்.
60. சர்க்கரை வியாதி நீங்க:
கோவை பழம் தினசரி 1
சாப்பிட்டு வர
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும
்.
61. தோல் வளம் பெற:
ஆலமரத்து பட்டைகளை பட்டுபோல்
அரைத்து வெந்நீரில்
கொதிக்க
வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து வாரம்
1 முறை பருகி வந்தால்
சரும நோய் வராது.
தோலும் வளம்பெறும்.
62. வரட்டு இருமல் தனிய:
எலுமிச்சம் பழச்சாறு தேன்
கலந்து குடிக்க
வரட்டு இருமல் குணமாகும்.
63. கருப்பை கோளாறு நீங்க:
அரசஇலை கொழுந்து 10 - 20
எடுத்து அரைத்து மோருடன்
பருகி வர கருப்பையில்
தங்கிய அழுக்குகள்,
அடைப்புகள், கட்டிகள்,
கிருமிகள்,
சதை வளர்ச்சி ஆகியவை தூய்மை அடையும
Friday, 6 June 2014
63சித்த மருத்துவம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment