Tuesday, 15 July 2014

இனவெறியன் யார்?

நான் ஒரு இனவெறியனாம்!
இப்போதுதான்
நிறுவிக்காட்டியதாகக்
கூறினார்கள்!?
என்னால் அதை முழுதும்
மறுக்க முடியவில்லை!
அழிவுக்குத் தள்ளப்படும் ஓர்
இனத்தின் முடிவை
அந்த இனத்திற்கான
உரிமை மறுப்பை
அந்த இனத்தின் உயிரிழப்பை
அந்த இனத்தின் கற்பழிப்பை
தடுத்து நிறுத்தத் தேவை ஓர்
இனவெறியன்தான் என்றால் நான்
இனவெறியனாகவே இருந்துவிட்டுப்
போகிறேன்.
இன்றைய தமிழினத்தின்
நிலையிலிருந்து அதை மீட்டெடுக்கும்
இனவெறியர்களை மேலும்
மேலும்
உருவாக்கவே செய்வேன்.
நான்கே வரியில்
கூறுகிறேன்.
இவ்வுலகத் தமிழரே!
'நல்லவனாக
இருக்கிறாயோ இல்லையோ வல்லவனாக
இரு'
'தமிழன் வாழவேண்டும்
இல்லையேல் எவனும்
வாழக்கூடாது' .

posted from Bloggeroid

No comments:

Post a Comment